ஏப்ரல்மாதம் என்றாலே வேப்ப மரங்கள் பூக்கும் காலம் என்று அனைவருக்கும் தெரியும். வேப்பம் பூவை சேகரித்து வடகம் செய்வதற்கும் ஏற்ற காலம் இதுதான். தினமும் சிறிது வேப்பம்பூவை சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம், பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீரல் பாதுகாக்கப்படும். பூச்சித்தொல்லை நீங்கும்.வடகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதனை தனியாகவும் ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.பலவித மருத்துவ குணங்களைக் கொண்ட வேப்பம் பூவில் வடகம் செய்வது எப்படி?
வடகம் செய்ய தேவையான பொருட்கள்:
காய வைத்த வேப்பம்பூ- 3 கப், உளுந்து-1 கப்,வெட்டிய வெங்காயம்- 1/2 கப், பெரிய சீரகம்-1 மேசைக்கரண்டி, சிறிய சீரகம்-1 மேசைக்கரண்டி, மிளகு- 1 தேக்கரண்டி ,கறிவேப்பிலை-ஒருகைப்பிடி, மிளகாய் பிளேக்ஸ்-2 மேசைக்கரண்டி ,உப்பு தேவையான அளவு
செய்முறை:
மிளகு, பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும், உளுந்தை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலக்கவும். பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
வேப்பம்பூ வடகம் தயார்.
இதனை ஒரு சுத்தமான் காய்ந்த கண்ணாடி டப்பாவினுள் போட்டு தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.