வரலாற்றில் இன்று – 27.04.2024
வரலாற்றில் இன்று – 27.04.2024

(புதியவன்)

ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார்.
629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார்.
711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர்.
1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் சமரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டன.
1521 – நாடுகாண் பயணி பெர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சுப் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
1522 – மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு-வெனீசியப் படையினரை எசுப்பானிய-திருத்தந்தைப் படையினர் தோற்கடித்தனர்.
1565 – பிலிப்பீன்சின் முதலாவது எசுப்பானியக் குடியேற்றம் செபு அமைக்கப்பட்டது.
1667 – பார்வையற்ற ஜான் மில்டன் தான் எழுதிய பாரடைஸ் லாஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
1805 – அமெரிக்கப் படையினரும், பேர்பர்களும் திரிப்பொலியின் தெர்னா நகரைத் தாக்கினர்.
1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கைக் கைப்பற்றின.
1865 – 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்தானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.
1906 – உருசியப் பேரரசின் சட்டமன்றம் (தூமா) முதல் தடவையாகக் கூடியது.
1909 – உதுமானியப் பேரரசின் சுல்தான் இரண்டாம் அப்துல் அமீது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெகுமெது ஆட்சிக்கு வந்தான்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சுலோவீனியாவின் கம்யூனிஸ்டுகள், ஏனைய சோசலிசவாதிகளுடன் இணைந்து சுலோவீனிய நாட்டின் விடுதலை முன்னணியை அமைத்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமானியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏதென்சு நகரை ஊடுருவின.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினி செருமனியப் போர்வீரன் என்ற போர்வையில் வெளியேற முயன்றபோது இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: கடைசி நாட்சிப் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.
1959 – மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
1960 – பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐநா பொறுப்பாட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.
1961 – சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. மில்ட்டன் மார்காய் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.
1967 – கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸ்போ 67 கண்காட்சி ஆரம்பமானது.
1974 – அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாசிங்டனில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
1978 – இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.
1981 – பராக் முதன்முறையாக கணினிச் சுட்டியை அறிமுகப்படுத்தியது.
1986 – செர்னோபில் அணு உலை விபத்து காரணமாக உக்ரைனின் பிரிப்பியாத் நகரத்தில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1992 – செர்பியா மற்றும் மொண்டெனேகுரோவை உள்ளடக்கிய யுகொசுலாவியக் கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1992 – உருசியா மற்றும் 12 முன்னாள் சோவியத் குடியரசுகள் அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் உறுப்பு நாடுகளாக இணைந்தன.
1993 – காபோனில் லிப்ரவில் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் சாம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1994 – தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
2001 – தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
2002 – நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.
2005 – ஏர்பஸ் ஏ380 வானூர்தி தனது முதலாவது சோதனைப் பறப்பை மேற்கொண்டது.
2007 – எசுத்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செஞ்சேனை நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
2011 – ஐக்கிய அமெரிக்காவில் அலபாமா, மிசிசிப்பி, ஜோர்ஜியா, டென்னிசி மாநிலங்களில் 205 சுழல் காற்றுகள் தரைதட்டியதில் முன்னூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
2018 – 65 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்கொரியாவுக்குள் அடியெடுத்து வைத்த முதல் வடகொரியத் தலைவர் என்ற பெருமையை கிம் ஜொங்-உன் பெற்றார். கொரியப் பிணக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.


பிறப்புகள்


1593 – மும்தாசு மகால், முகலாயப் பேரரசி (இ. 1631)
1723 – பிலிப்பு தெ மெல்லோ, கொழும்பில் பிறந்த கிறித்தவத் தமிழறிஞர் (இ. 1790)
1737 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய வரலாற்றாளர், அரசியல்வாதி (இ. 1794)
1759 – மேரி உல்சுடன்கிராஃப்ட், ஆங்கிலேய மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1797)
1791 – சாமுவெல் மோர்சு, அமெரிக்க ஓவியர், மோர்சு தந்திக்குறிப்பை கண்டுபிடித்தவர் (இ. 1872)
1820 – எர்பெர்ட் இஸ்பென்சர், ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1903)
1822 – யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்காவின் 18வது அரசுத்தலைவர் (இ. 1885)
1852 – பிட்டி தியாகராயர், தமிழக அரசியல் தலைவர் (இ. 1925)
1878 – மரிய குவாதலூபே கார்சிய சவாலா, மெக்சிக்கோ கத்தோலிக்கப் புனிதர் (இ. 1963)
1902 – கந்த முருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (இ. 1965)
1912 – சோரா சேகல், இந்திய நடிகை, நடனக் கலைஞர் (இ. 2014)
1914 – எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை, இந்தியத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (இ. 2000)
1939 – ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, கினி-பிசாவு அரசுத்தலைவர் (இ. 2009)
1941 – அலெக்சாண்டர் துபியான்சுகி, உருசியத் தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர் (இ. 2020)
1941 – பத்ஹுல்லா குலன், துருக்கிய இறையியலாளர்
1942 – வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர்
1945 – பிரபஞ்சன், தமிழக எழுத்தாளர், விமர்சகர் (இ. 2018)
1955 – எரிக் ஷ்மிட், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
1962 – எட்வர்டு மோசர், நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்
1967 – வில்லியம்-அலெக்சாந்தர், நெதர்லாந்து மன்னர்
1969 – கோரி புக்கர், ஆப்பிரிக்க-அமெரிக்க அரசியல்வாதி
1995 – நிக் கீர்யோசு, Australian tennis player


இறப்புகள்


1521 – பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கீச மாலுமி, நாடுகாண் பயணி (பி. 1480)
1605 – பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1535)
1882 – ரால்ப் வால்டோ எமேர்சன், அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1803)
1883 – ஏதவார்து உரோச்சே, பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1820)
1886 – என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1838)
1937 – அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய சமூகவியலாளர், மொழியியலாளர், அரசியல்வாதி (பி. 1891)
1944 – கு. ப. ராஜகோபாலன், தமிழக எழுத்தாளர் (பி. 1902)
1995 – ஆட்டோ சங்கர், தமிழகக் கொலைக்குற்றவாளி (பி. 1954)
1962 – ஏ. கே. பசுலுல் ஹக், பாக்கித்தான் அரசியல்வாதி (பி. 1873)
1969 – என். ஆர். தியாகராஜன், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1913)
1972 – குவாமே நிக்ரூமா, கானாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1909)
1974 – ஸ்ரீரஞ்சனி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927)
1984 – எம். டி. இராமநாதன், கேரளக் கருநாடக இசைப்பாடகர் (பி. 1923)
2009 – பெரோஸ் கான், இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் (பி. 1939)
2015 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
2017 – வினோத் கன்னா, இந்திய நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (பி. 1946)


சிறப்பு நாள்


விடுதலை நாள் (தென்னாப்பிரிக்கா)
விடுதலை நாள் (சியேரா லியோனி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1961)
விடுதலை நாள் (டோகோ, பிரான்சிடம் இருந்து 1960) (ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

205 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.