(இனியபாரதி)
வல்லமை சமூக மாற்றத்துக்கான போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால சமூக அரசியல் பொருளாதார சூழலை விளக்கி கொள்ளுதல் என்ற தலைப்பில் கலந்துரையாடல் தொடர் ஒன்று இன்று (27) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் சட்டத்தரணி சுவஸ்திகா ,சட்டத்தரணி இளங்கோவன், பவ்ரல் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சசிகாந் மற்றும் மற்றும் வல்லமை அமைப்பு பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
அதேவேளை சட்டத்தரணி சுவஸ்திகா தனது உரையில் தற்கால பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களையும் மற்றும் தற்கால அரசியல் சமகால போக்கு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இதேவேளை சமூக ஆர்வலர்கள் சட்டத்தரணி சுவஸ்திகாவிடம் தற்காலப் பிரச்சினைகளில் அதிகளவாக போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக பிரச்சனைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதேவேளை March 12 movement தொடர்பான கருத்துக்களும் பகிரப்பட்டன.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.