யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபராகத் தேடப்பட்டுவந்தவர் கடல் வழியாகத் தப்பித்து நேற்று தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தரையிறங்கிய அவரை மரைன் பொலிஸார் கைது செய்தனர். குறித்த சந்தேகநபரிடம் மரைன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவர் தொடர்பான தகவல்கள் யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரின் புகைப்படத்தைச் சோதித்துப் பார்த்து அவர் கொலைச் சம்பவம் ஒன்றில் தேடப்படும் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.