எழிலன்
இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்கு ஏழுபேர் தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இவர்கள் ஏழு பேரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் மன்னார் சென்று அங்கிருந்து படகுமூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களைக் கைது செய்த தமிழகக் கடலோரக் காவல் படை, அவர்களை மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (எ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.