[புதியவன்]
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நேற்று முன்தினம் இதனை அறிவித்தது.
2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
இதன்படி, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
இதனையடுத்து, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹர்திக் பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 இலட்சம் பின்தொடர்பவர்களை மும்பை அணி இழந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டமை நியாயமற்றது எனவும், இதனாலேயே மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.