(புதியவன்)
விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்ற இந்தியர்கள்: நீரில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலாவி சென்றிருந்த நால்வர் பீலிப் தீவு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நால்வரும் இந்தியர்கள் என இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின்- விக்டோரியாவில் உள்ள பீலிப் தீவில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் மாலை அலையில் அடித்துச்செல்லப்பட்டனர். இதனையடுத்து தீவில் உள்ள கடற்கரைக்கு அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு அதிகாரிகள் முதலுதவி அளித்தாலும் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 20 இயதுடைய இரு யுவதிகளும், 40 வயதுடைய ஆண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
முதலுதவிக்கு பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மேலும் ஒரு பெண் வானுர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், விடுமுறையை கழிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.