(ஆதவன்)
துருக்கியைச் சேர்ந்த பெண்ணொருவர், பல நாள்களாக குளிக்காமல் மற்றும் பல் துலக்காமல் இருந்த தனது கணவனை விவாகரத்துச் செய்துள்ளார்.
குறித்த பெண் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு, அண்மையில். துருக்கிய தலைநகர் அங்காராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பல நாள்களாக குளிக்காமல் இருப்பதையும் வாரத்தில் சில நாள்கள் மாத்திரமே பல் துலக்குவதையும் தனது கணவனை விவாகரத்துச் செய்கின்றமைக்கான முக்கியமான காரணங்களாக அந்தப் பெண் குறிப்பிட்டார்.
கணவனின் இந்தப் பழக்கம் காரணமாக அவர்களின் திருமண உறவு பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதற்கு சம்பந்தப்பட்ட ஆணே காரணம் எனத் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், விவாகரத்துடன் சேர்த்து பெண்ணுக்கு இழப்பீடாக ஐந்து லட்சம் லீரா வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.