(புதியவன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பெரு நிலப்பரப்பின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வயல் நிலங்களில் அதிகளவு வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
வெளிநாட்டுப் பறவைகள் உள்நாட்டுக்கே உரித்தான கொக்கு, மைனா, நாரைக்கொக்கு, ஆள்காட்டி, உள்ளிட்ட பல பறவைகளுடன் இணைந்து கூட்டம், கூட்டமாக வயல் நிலங்களில் இரை தேடி வருவதையும், அவதானிக்க முடிகின்றது.
பார்ப்பதற்கு பல வர்ணங்களுடன் மிக அழகாகக் காட்சி தரும் பறவைகளை கண்டு அப்பகுதி மக்கள் இரசித்து வருகின்றனர்.
பூகோள ரீதியில் வட துருவத்திலிருந்து தான் அதிக பறவைகள் வருகின்றன. இதனை இடம்பெயரும் பறவைகள் என அழைப்பதில்லை. மாறாக அவை “வலசை வரும் பறவைகள்” என அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு பறவைகள் மாத்திரமல்ல வண்ணாத்துப்பூச்சி, சிங்கறால், திமிங்கலம், நீலத்திமிங்கலம், உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களும் வருகின்றன.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.