புதியவன்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஆளுநரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான திருமதி சுசித்ரா எல்ல கலந்து சிறப்பித்தார்.
திருமதி சுசித்ரா எல்ல கொவிட் காலப்பகுதியில் கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 பில்லியன் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான திருமதி சுசித்ரா எல்லவைமதிப்பளிக்கும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரால் "உலகின் மிகவும் பலமிக்க பெண்" விருது வழங்கி வைக்கப்பட்டதுடன், 1880ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையக பெண் ஒருவர் தேயிலை பறிக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் ஆளுநரால் திருமதி சுசித்ரா எல்லவுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலையில் கல்வி துறையில் சாதித்த பெண்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், பெண்கள் அமைப்புகள் போன்ற பல சாதனைகளை நிலைநாட்டிய பெண்களுக்கும் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
மேலும் கலாசார நிகழ்வுகள், சாதனை படைத்த பெண்களை மதிப்பளிக்கும் முகமாக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில நுவான் அத்துகோரல, எம்.எஸ். தௌஃபீக்,பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க,ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, திருகோணமலை மாவட்ட செயலர் சாமிந்த ஹெட்டியாரச்சி உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.