(புதியவன்)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இன்று 10 புதிய வந்தே பாரத் தொடரூந்துகளின் சேவையை தலைமை அமைச்சர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை - மைசூர் வந்தே பாரத் தொடரூந்து சேவையும் அடங்கும். மேலும், பல்வேறு தொடரூந்து சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடரூந்து உள்கட்டமைப்பு, தொடர்பு மற்றும் பெட்ரோ இரசாயன துறையை ஊக்கப்படுத்தும் வகையில், அகமதா பாத்தில் உள்ள டி.எப்.சியின் கட்டுப்பாட்டு மையத்தில் நடந்த விழாவில் தலைமை அமைச்சர் மோடி, ஒரு இலட்சத்து ஆறாயிரம் கோடி ரூபா மதிப்பிலான தொடரூந்து மற்றும் பெட்ரோ இரசாயன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.