புதியவன்
திருகோணமலை மடத்தடி வீரகத்தி விநாயகர் ஆலயம் முன்பாகவுள்ள ஆலயத்துக்குச் சொந்தமான வளாகத்தில் பௌத்த கட்டுமான நடவடிக்கைகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் அடாத்தாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் இந்தப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அறியவருகின்றது.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது பெளத்த கட்டுமானம் நடைபெற்று வருகின்றது.
இதேநேரம், அந்தக் காணியின் ஆவணங்களைத் தங்களிடம் தருமாறும் அவர்கள் ஆலய நிர்வாகத்தினரை மிரட்டி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.