(புதியவன்)
உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக ‘எக்ஸ்’ செய்தியில் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அவரது பயணம் குறித்த திகதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில் முதலீடு செய்வது தொடர்பான உடன்பாட்டை எட்டுவதே அவரது வருகையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் இந்தியா மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை கணிசமாக குறைத்தது.
500 மில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உள்நாட்டில் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்கக்கூடிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் அந்த வாய்ப்பின் கீழ் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
டெஸ்லாவின் தலைவரான மஸ்க், 2021 ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் வெளியிடுவது அதிக இறக்குமதி வரிகளால் தடைபட்டதாகக் கூறினார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.