இனியபாரதி.
இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துணைத்தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ்- இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
மேலும், இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்ததைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் மற்றும் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.