நாடகமும் அரங்கியலும் கற்கைநெறி மே மாதம் ஆரம்பம்
நாடகமும் அரங்கியலும் கற்கைநெறி மே மாதம் ஆரம்பம்

பதிவிற்காக +94773112692 வட்சப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பவும்

(இனியபாரதி)

நாடகமும் அரங்கியலுக்குமான சான்றிதழ் கற்கைநெறி எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் திகதி ஆரம்பமாகிறது.

பயிற்சி நெறியின் இயக்குனராக கலாநிதி தே.தேவானந்த் அவர்கள் பணியாற்றுவார்.

அரச தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மாணவர்களின்  வேண்டுகோளுக்கமைவாக மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை பயிற்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

மூன்று மாத காலம் 60 மணித்தியாலங்கள்  சனி ஞாயிறு 6.00  - 8.30 வரை பயிற்சி நடைபெறும்.   

பயிற்சி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள முற்றம் அலுவலகத்தில் நடைபெறும். பயிற்சியில் பங்கு கொள்பவர்களுக்கான  வயதெல்லை 20 - 45 ஆகும். பாலர்பாடசாலை ஆசிரியர்கள், ஆரம்பப்பாடசாலை  ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சியில் பங்கு கொள்ளலாம்.

பயற்சி செயல்முறை சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் நல்லூர் நாடகத் திருவிழாவில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

பயிற்சி இலவசமாக நடைபெறும். பதிவு செய்வதற்காக ரூபா 2000 கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்வதற்கான வட்சப் இலக்கம்: +94773112692 சுயமாக தயாரிக்கப்பட்ட சுயவிபரக்கோவையை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சியில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 

பயிற்சி உள்ளடக்கம்

நாடகக் கோட்பாடுகள்

நடிப்பு பயிற்சி 

நாடகம் எழுதுதல்

 நாடக நெறியாள்கை 

 நாடகப்படைப்பாக்கம்

சிறுவர் நாடகத் தயாரிப்பு

பயிற்சியை செயல் திறன் அரங்க இயக்கம் மற்றும் முற்றம் நிறுவனம் ஒழுங்கு செய்து நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(ஏ)

 

76 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.