(ஆதவன்)
யாழ்ப்பாண மாநகரசபையின் ஆழுகைக்கு உட்பட்ட நாவாந்துறை பொதுச்சந்தை போதிய பராமரிப்பு வசதிகள் இன்றி துர்நாற்றத்தோடு காணப்படுகின்றது என்று பிரதேச மக்களும் வியாபாரிகளும் சுட்டிக்காட்டியுள்னர். இந்தச் சந்தையில் மரக்கறிகள், இறைச்சி வகைகள், மீன்கள் போன்ற வற்றுக்கான விற்பனை நிலையங்கள் உள்ளன. அதிகளவான மக்கள் இந்தச் சந்தையில் ஒன்றுகூடுகின்றனர்.ஆயினும் சந்தை போதிய பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது. சரியான முறையில் சுத்திகரிப்புச் செய்யப்படாமை மற்றும் கழிவகற்றப்படாமையால் அங்கு துர்நாற்றம் வீசுகின்றது. கழிவுகளில் புழுக்கள் உருவாகி விற்பனைநிலையங்களுக்குள்ளும் புகுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகரசபைக்குப் பல முறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடிகாலமைப்பு, நீர் மற்றும் மலசலகூட வசதிகளையும், உரியமுறையில் கழிவுகளை அகற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.