(யோகி)
வடமாகாண ரீதியிலான தமிழ்த் தேசிய மே தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.
மே தின கூட்டத்துக்கு முன்பு எழுச்சி பேரணி மற்றும் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் வாகன ஊர்திகளும் கிளிநொச்சி சித்திவிநாயகர் முன்றலில் இருந்து மத்திய கல்லூரி மைதானம் வரை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மே தின நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சீ.வி.கே சிவஞானம் மதகுருமார், மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.