வடக்கு மாகாணத்தில் முதல்முறையாக ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி விற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன 21ஆம் நூற்றாண்டுக்கான விவசாயப்புரட்சியின் முக்கியமான சேயற்றிட்டகளில் ஒன்றான ட்ரோன்கள் மூலமாக நா வில்லும் செயற்பாடுகள் மன்னாரில் உள்ள பயறுச் செய்கையில் முன்னேடுக்கப்பட்டிருப்பது வரவேற்கப் வேண்டியதே அதில் ;மாற்றுக்கருத்துக்கு இடமில்லை ஆனால் இந்த நவீனத்துவந்தால் வரப்போக பாதகத்தனங்களை உய்த்துணர்ந்தவர்களாக செயற்க வேண்டியது எம்முன்பாக உள்ள கூட்டுப் பொறுப்பர் காணப்படுகின்றது.
சோளன்கள் இலகுவாக பூச்சித் தாக்கத்துக்கு உட்படும் தன்மையின இதனால், சோளன் தோட்டத்தில் ஏற்படக்கூடிய பூச்சி, புளுத் தாக்கத்தை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்கும் மிகக்குறைந்த நேரத்தில் கூடுதலான பரப்பளவில் கிருமிநாசினிகளைத் தூவுவதற்காகவும் அமெரிக்காவால் முதன்முதல்ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. வேறு நாடுகள் இதற்கு உரிமை கோரினாலும், பரந்துபட்ட அளவு அளவில் பெருமெடுப்பில் இலை நடைமுறைச் சாத்தியமாக்கப்பட்டு அமெரிக்க சோளன் தோட்டங்களிலேயே பின்னர் படிப்படியாக மேற்கு நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு ட்ரோன்களை விவசாயத்துக்குப் பயன்படுத்தாத நாடுகளே இல்லை என்னும் அளவுக்கு அதன்பயன்பாடு பல்கிப் பெருகியுள்ளது. இங்கே கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்ற அடிப்படையில் இந்த நாடுகள் ட்ரோன்களின் பயன்பாட்டை நாடவில்லை. சிலகாலத் திட்டமிடல்கள் அந்தந்த நாடுகளுக்குத் தேவைப்பட்டன. அந்தப் பரிசீலனைகள் இலங்கையில் மேற்கொள்ளப் பட்டனவா? என்ற கேள்விக்குப்பதில் தேட வேண்டியது
இங்கு காலத்தேவையானது, கட்டாயமானது.
ட்ரோன்களை விவசாயத்துக்குள் கொண்டு வருகின்றபோது நிச்சயமாக அது 'உற்பத்திசார்' ஆரோக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தவே செய்யும். கூடுதலான நிலப்பரப்பை மிகக்குறைந்த நேரத்துக்குள் கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும், கிருமிநாசினிகளைத் தெளிக்கவும் ட்ரோன்கள் உதவும். ஆனால், இத்தனை காலமும் இந்தக் கடமைகளை நிவர்த்தித்துக் கொண்டி குந்த மனித வலு என்னவாகப் போகின்றது? இயந்திரங்கனின் அறிமுகமும், அதன் அதீத பயன்பாடும். ஒவ்வொரு விடயத்திலும் ஏதோவொரு வகையில் தொழிலிழப்பு களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே ட்ரோன்களைக் கொண்டு கிருமிநாசினிகளை விசிறும்போது, கிருமிநாசினிகள் விசிறுவதைத் தன் தொழிலாகக் கொண்டிருந்த மனிதன் இனி என்னவாவான்? அவனின் தொழில் இனி என்னவாகும்? இந்தத் தொழிலிழப்புக்குப் பதில் சொல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கில்லையா?
மேற்கு நாடுகளில் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, விவசாய் நிலங்களின் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டது. 'மனிதனும் - இயந்திரமும் இணைந்த வேளாண்மை' என்பதே அங்கு கருப்பொருளாகவும் தொனிப்பொருளாகவும் இருந்தது. விவசாயநிலப்பரப்பு அதிகரிக்கின்றபோது மனிதவலு நிச்சயம் தேவை. ஆதலால் அங்கு தொழிவிழப்புகள் அவ்வளவாக ஏற்பட வில்லை. மாறாகத் தொழில் மாற்றங்களே ஏற்பட்டன. இதன் விளைவாக உற்பத்தி பெருகியது, ஏற்றுமதி அதிகரித்தது.ஆதலால், இவ்வாறான செயற்றிட்டங்கள்தான் வடக்குக்குத் தேவையே அன்றி மனித வலுவின் அவசியத்தை பூச்சியத்துக்குக் கொண்டு வரும் செயற்றிட்டங்கள் அல்ல. ட்ரோன்களை மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை தொழில்நுட்பங்களையும் கொண்டு வாருங்கள், விவசாயத்தை மேம்படுத்துங்கள். ஆனால், ஒரு மனிதனை அவனை நம்பியுள்ள குடும்பத்தின் பசியை அந்த இயந்திரம் ஆட்கொண்டு விழுங்கிவிட அனுமதித்துவிடாதீர்கள். 'மனிதனையும் இயந்திரத்தையும் இணைந்தாற்போலான விவசாயத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு மேம்படுத்துங்கள். ஏனெனில் அதற்குப் பெயர்தான் அபிவிருத்தி.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.