(யோகி)
புதுக்குடியிருப்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (28) பேருந்தை மறித்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
குறித்த சோதனையில் 45 லீட்டர் கசிப்பு சிக்கியத்துடன், சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ய முற்பட்ட போது ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் பொலிஸார் அவரை துரத்தி பிடித்ததாகவும் தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க தெரிவித்தார்.
விசுவமடு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லவிருந்த கசிப்பே இவ்வாறாக கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் கசிப்பை பொதி செய்து எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.