(புதியவன்)
சுகாதார அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 350 சிறப்பு மருத்துவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ள போதிலும், அது பல மாதங்களாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஜனவரி முதல் இதுவரை 300 முதல் 350 வரையான சிறப்பு மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் ஏழு சிறப்பு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொனராகலை, மஹியங்கனை, ஹம்பாந்தோட்டை போன்ற மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறப்பு மருத்துவர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, குறித்த மருத்துவர் விடுப்புக்கு முறையான அனுமதி அளித்துள்ளாரா என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு பணிமனை பரிசோதிக்க வேண்டும். நுழைவிசைவு வழங்கும் போது சட்ட நிலைமையை பரிசோதிக்க வேண்டிய போதிலும், நாட்டை விட்டு வெளியேறிய சில சிறப்பு மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் சட்ட அனுமதியின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்குச் சென்ற சிறப்பு மருத்துவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பணிமனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.