மருத்துவர் உவைஸ் தெரிவிப்பு!
பொத்துவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட சகல இடங்களிலும் உள்ள விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அதனைக்கையாளும் நிறுவனங்கள் பொத்துவில் சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் எப்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் சகல நிறுவனங்களும் அதனைக்கையாளும் நிறுவனங்களும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பொத்துவில் சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் உணவுகளை தயாரிப்பவர்களும் அதனைக் கையாளுபவர்களும் மேற்குறித்த திகதிக்கு முன்னர் கட்டாயமாக மருத்துவச் சான்றுதழினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உரிய காலத்துக்குள் பதிவு செய்தல் மற்றும் மருத்துவச் சான்றுதழினைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் உவைஸ் மேலும் தெரிவித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.