இனியபாரதி.
யாழ். மாவட்ட விவசாய குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை(30) பதில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் தென்னை பயிர் செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய வெண் ஈ தாக்கம் தொடர்பாக அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது இதனை கட்டுப்படுத்துவதற்கு திணைக்களங்கள் கவனம் செலுத்தவில்லை என விவசாயிகளால் குற்றம் சாட்டப்பட்டது
விவசாய நவீனமயமாக்கல் திட்டம் யாழ்ப்பாணத்தில் விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளதாக விவசாய அமைப்புக்கள் குற்றம் சாட்டியது
கலந்துரையாடலில் யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கைலேஸ்வரன் விவசாய திணைக்கள அதிகாரிகள் யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.