இனியபாரதி.
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் நூற்றாண்டு விழா யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கல்லூரி சரஸ்வதி அரங்கில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அறக்கட்டளை மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி என்பன இணைந்து நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை மாலை 2 மணி தொடக்கம் 6 மணி வரையிலும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி காலை 09 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையில் நடைபெறவுள்ளது.
நூற்றாண்டு விழாவின் இரு நாள் நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலாநிதி தி.கமலநாதன் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அழைப்பு விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.