மாதவன்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் மீனவ சங்க இணைப்பாளரும் சமுக ஆர்வலருமான கிறிஸ்டோபர் சுரேந்திரன் வில்சனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
அமரர் கிறிஸ்டோபர் சுரேந்திரன் வில்சன் அவர்கள் பல்வேறுபட்ட சமூக சேவைகளிலூடாக பிரதேச சமுக மாற்றத்திற்கு முற்போக்கான பங்களிப்பை நல்கிய ஒருவராவார். அறிவார்ந்த சமூக அக்கறையுள்ள ஒருவரை வட்டுக்கோட்டை மண் இழந்திருப்பதை எண்ணி வருந்துகிறேன்.
தமது 68 ஆம் வயதில் எம்மை விட்டு நீங்கிய அன்னார் சிறந்த கொள்கையுடன் வாழ்ந்தவர் என்பதுடன், அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை. வாழ்க்கையை புரிந்து கொள்வது போன்று நம் வாழ்வின் முடிவினையும் புரிந்து கொள்ளவேண்டும். நாம் மறைந்தாலும் நமது நற்செயல்கள் உலகை விட்டு மறைவதில்லை என்ற உண்மையை எண்ணி மனதினை உறுதிப்படுத்திக்கொள்வோம். அன்னாரின் மறைவால் துயரத்தால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.