மாதவன்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் ஏ9வீதியில் இன்று புதன்கிழமை(01) காலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் சிறியரக உழவு இயந்திரத்தின் பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த மகிழுந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த கோண்டாவிலையைச் சேர்ந்த ம. சதீஸ்குமார் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்திர ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த மூவரும் மகிழுந்தில் பயணித்த பெண் ஒருவருமாக மொத்தம் நால்வர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.