(புதியவன்)
பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகள் தீர்வை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ. எம். டபிள்யூ.வன்னிநாயக்க இன்று (06) தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் மாநாட்டில் அதன் தலைவர் டபிள்யூ. எம். டபிள்யூ. வன்னிநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பணிப்புறக்கணிப்புக்கு சமாந்தரமாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சங்கம் நாளை (7) காலை 10.00 மணி முதல் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதுடன், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யாமை மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளாமை உள்ளிட்ட 11 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.