(இனியபாரதி)
குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி அதை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் மருத்துவமனையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையை அவர் நேற்று இரவே பிரசவித்துள்ளார். குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தையை பிரசவித்த சிறுமி, விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் அவரது தாயாருடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.