(மாதவன்)
மக்களின் சுகாதார நலன்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலையத்திற்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளின் பிரசன்னத்துடன் ஆராய்ந்துள்ளார்.
இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ளன.
இதன்காரணமாக குறித்த திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி இளைஞர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மூன்று தினங்களின் பின்னர் அங்கு நேரடி கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளின் பிரசன்னத்துடன் நிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன் அது குறித்து நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கவனத்தில் எடுக்கப்பட்டு நியாயமான தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.