வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாணந்த குருக்கள் தலைமையில் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான சுப நேரத்தில் கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு முன் எழுந்தருளியதை தொடர்ந்து வழிபாடுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து கொடிக் கம்பத்திற்கு சிறப்பான அபிஷேகம் இடம் பெற்றது.
கொடியேற்ற பெருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.