(புதியவன்)
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான சிறிலங்கா பொலிஸார் குவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்றைய தினம் காலை எட்டு முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது.
கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்திருந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்தனர்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தலை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கினர். அங்கிருந்து அனைவரையும் கலைந்து செல்லுமாறும் எச்சரித்தனர்.
திருகோணமலையிலும் இவ்வாறு தடை உத்தரவைப்பெற்ற பொலிஸார் அதை மீறி முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியவர்களை நள்ளிரவு கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.