(புதியவன்)
சீரற்ற வானிலை மற்றும் கடும் மழையுடன் வலஸ்முல்ல ஆதார மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் மின்னல் தாக்கி தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தின் போது, அந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகளை விரைவாக வெளியே அழைத்துச் சென்று, தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவமனை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
மின்னல் தாக்கத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வலஸ்முல்ல ஆதார மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட தீயை அணைக்க வலஸ்முல்ல பொலிஸார், இலங்கை மின்சார சபை மற்றும் தங்காலை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.