(புதியவன்)
211 பயணிகள், 18 வானூர்தி ஊழியர்களுடன் லண்டனின் ஹீத்ரூ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருந்த வானூர்தி நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர் .
இது வானூர்தி விபத்துகளில் மிகவும் அரிதானதொன்று எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஓர் அரிதான சம்பவம். லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எங்கள் Boeing 777-300 ER ரக SQ321 என்ற வானூர்தி வழியில் பயங்கரமாக குலுங்கியது. இதனால் வானூர்தி பாங்காக்க்கு திருப்பி விடப்பட்டு அங்கே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு வானூர்தி பாங்காக் வானூர்தி நிலையத்தில் தரை இறங்கியது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.