கொழும்பில் அதிக பெறுமதியுடைய காணிகளுக்கு போலி பத்திரங்கள் விற்பனை செய்த நபர் கைது.இது தொடர்பில் சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீதிபதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பல அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 300 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய மோசடியாளர் 72 வயதாமொஹமட் சாலி மொஹமட் அன்சார் என தெரியவந்துள்ளது.
கடந்த 27ஆம் திகதி கொழும்பு எட்மன்டன் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பான விசாரணையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடு, காணி தருவதாக கூறி நபர் ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு கிடைப்பப்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரிடமிருந்து 300 உத்தியோகபூர்வ முத்திரைகள், வெளிநாட்டவரின் கடவுச்சீட்டு, 11 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 04 தேசிய அடையாள அட்டைகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.