சிங்கப்பூரில் மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 வயது இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான குறித்த நபர் நேற்று முன் தினம் 5 மணியளவில் மரைன் பரேட் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, விடுதியிலுள்ள தனது மனைவியைக் கொன்றதாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விடுதி அறையில் வெட்டுக் காயத்துடன் இருந்த மனைவியின் சடலத்தை மீட்டனர்.
அதேவேளை குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கத்தி ஒன்று விடுதி அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.