நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதன் பின், விக்ரம் டப்பிங் பணிகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கினார். இருப்பினும் படத்தின் ரிலீஸ் திகதி சில காரணங்களால் தள்ளி சென்றுகொண்டு இருந்தது. இறுதியாக வரும் நவம்பர் 24-ஆம் திகதி பிறகு படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விக்ரமுக்கு பதிலாக இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் பற்றிய தகவல் பரவி வருகிறது. அதன்படி, முதலில் சூர்யாவிடம் தான் இயக்குனர் கெளதம் மேனன் படத்தின் கதையை கூறினாராம். ஆனால், நடிகர் சூர்யா சில காரணங்களால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதாவது சூர்யாவிற்கு துருவ நட்சத்திரம் படம் பிடிக்கவில்லை என்பது போல இந்த தகவல் விக்ரமிற்கு வேறு மாதிரி போக சற்று அதிர்ச்சியில் இருந்தாராம்.
சூர்யாவுக்கு எதற்காக இந்த கதை பிடிக்கவில்லை என கெளதம் மேனனை பின் ஒரு முறை விக்ரம் சந்தித்து பேசும் போது கேட்டாராம். அதற்க்கு கெளதம் மேனன் சூர்யாவுக்கு கதை மிகவும் பிடித்திருந்து அவர் நேரில் அழைத்து படத்தின் கதை முழுவதும் கேட்டார் படத்தின் ஐடியா பற்றி கூறினேன். அவருக்கு கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது. ஆனால், அந்த நேரம் இரண்டு பெரிய படங்களில் நடிக்க சூர்யா கமிட் ஆகி இருந்தார்.
அதன் காரணமாக தான் சூர்யாவால் இந்த திரைப்படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதாக விக்ரமிடம் கெளதம் மேனன் கூறினாராம். கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நல்ல வெற்றியை துருவ நட்சத்திரம் 1-வது பாகம் பெற்றது என்றால் இரண்டாவது பாகம் எடுப்பேன். அதுவும் யுனிவர்ஸ் பார்மெட்டில் எடுப்பேன் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.