திடீரென ஏற்படும் சுனாமிப் பேரழிவிலிருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்வது என்ற முன்னேற்பாட்டு விழிப்புணர்வு நடவடிக்கைச் செயற்றிட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் தாழ்வுபாடு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. மன்னார் பிரதேச செயலகமும், மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் என்பன ஒருங்கிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன .
நிகழ்வில் சுனாமி எச்சரிக்கைத் தகவலானது மன்னார் வலயக் கல்வி அலுவலர் மூலம் பாடசாலை அதிபருக்குக் கிடைக்கப்பெற்றவுடன் அதிபரால் பாடசாலை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அபாய ஒலி எழுப்பப்பட்டு சில நிமிடங்களுக்குள் மாணவர்கள் ஒன்றாக்கப்பட்டு முதலுதவிகளுக்காக வருகை தந்த படையினரின் வாகனங்களிலும் மருத்துவத் துறையினரின் அம்புலன்ஸ் வண்டிகளிலும் விரைவாக பாதுகாப்பான இடங்கள் நோக்கி வெளி யேற்றப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது.
நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப், இடர் முகாமைத்துவ அதிகாரி கனகரெத்தினம் திலீபன் மற்றும் மன்னார் வலயக் கல்வி அலுவலர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முப்படையினர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர். சென்.ஜோசப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சம்பந்தப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.