பாடசாலை மாணவன் கைது!
குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக சிறப்பு அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்(10) திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கூரிய வாள் மூன்று கூறிய கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் 40 வயதான சந்தேக நபரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான 17 வயது இளைஞன் ஒருவர் கூரிய கத்தியால் சிறப்பு அதிரடிப்படையினர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து குறித்த இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது காயத்திற்கு உள்ளான சிறப்பு அதிர அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.