புதியவன்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையான போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி 40 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையான போர் காரணமாக காசா நகரில் வாழும் மக்கள் தான் அதிக உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை அடைந்துள்ளனர் என கூறி போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தினர்.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். இஸ்ரேலை சேர்ந்த பணையக்கைதிகளை ஹமாஸ் தரப்பும் இன்னும் விடுவிக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பணயக்கைதிகளை விடுவிக்க 4 நாள் போர் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். இஸ்ரேல் அமைச்சரவையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், 4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அவர் இதுபற்றி தெரிவிக்கையில், ஹமாஸிடம் பணயக்கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கவே இந்த போர்நிறுத்தம் எனவும், இது போர் முற்றிலும் நிறுத்துவதற்கான அறிகுறி இல்லை எனவும், எங்கள் இலக்கான ‘ஹமாஸ் ‘ முற்றிலும் அழியும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
நாளை (வியாழன்) அல்லது நாளை மறுநாள் (வெள்ளி) முதல் ஒரு நாளைக்கு 10 பணயக்கைதிகள் வீதம் ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும், அதுவரையில் போர் நிறுத்தம் எனவும் இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.