புதியவன்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒக்டோபர் 7ம் தேதி முதல் காசா பகுதியில் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வருகிறது. இதனால் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பெரும்பாலும் காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் போர் நிறுத்தம் குறித்து இந்தியா உட்பட பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார்.
இதனால் ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க, 4 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது வடக்கு காசா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய குழு ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமையால் (UNRWA) நடத்தப்படும் அபு ஹுசைன் பள்ளியின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவிற்கு வெளியே எங்கிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மொசாட் உளவு அமைப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். (எ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.