ஆதவன்
மன்னார் சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம் பெற்றது. 4 டிங்கிப் படகுகள், சுமார் ஆயிரத்து 670 கடல் அட்டைகள் மற்றும் சட்ட விரோத டைவிங் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட் டன.
கல்பிட்டி, சிலாவத்துறை. வங்காலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர். சந்தேகநபர்களையும் சான்றுப்பொருள்களையும் மேலதிக சட்டநடவடிக்கைக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.