ஆதவன்
மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். மன்னார் சாந்திபுரம் பகுதியில் வசித்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே தமிழ்நாட்டில் தஞ்சமடைந் துள்ளனர்.
இந்த இரு குடும்பங்களும் தலா ஒரு இலட்சம் ரூபாவை படகுக் கட்டணமாகச் செலுத்தி தனுஷ்கோடி பகுதியைச் சென்றடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஏழு பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.