மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மீண்டும் வாள்வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது இதில் மூன்று பேர் காயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது
இந்த சம்பவமானது நேற்று (9) இரவு 8.30 மணியின் பின்னர் இடம்பெற்றுள்ளது
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
சம்பவ தினத்தின் காலையில் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதங்கள் குழு மோதல்களாக உருவெடுத்து நேற்று இரவு கைகலப்பு வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளது
இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவசர தகவல்கள் தெரிவிக்கின்றது
இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிய வருகிறது
மேலும் இதே அச்சங்குளம் கிராமத்தில் சிலமாதங்களுக்கு முன்னர் வாள் வெட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.