[புதியவன்]
இத்தாலி நாட்டில் உள்ள பயென்சா நகரம், போலோக்னா - ரிமினி இரயில் நிலையங்களுக்கு இடையே அதிவிரைவு இரயிலும், உள்ளூர் பயணிகள் இரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு இரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. இதனால் விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் மேட்டியோ ஷால்வானி, "அதிவிரைவு மற்றும் உள்ளூர் பயணிகள் இரயில்கள் மெதுவான வேகத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி இருக்கிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இரயில்கள் மிதமான வேகத்தில் சென்றதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது" என கூறினார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.