புதியவன்.
மன்னார் சிலாவத்துறையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நேற்றிரவு நீரில் மூழ்கிய 07 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையின் மூலம் 02 டிங்கி படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டன.
மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யpபட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 7நபர்கள் மற்றும் அவர்களது உடைமைகள், சான்றுப் பொருட்கள் என்பன சிலவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.