[புதியவன்]
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 குடும்பத்தை சேர்ந்த9 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் 12வது வாரமாக நடந்து வருகிறது. இதுவரை இப்போரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காசா நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு கட்டிடம் மீது வீசப்பட்ட குண்டுவீச்சில், ஐநா வளர்ச்சி திட்டத்தின் மூத்த பணியாளரான இஸ்லாம் அல் முக்ராபியின் குடும்பத்தை சேர்ந்த 76 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னொரு குடும்பத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.