(புதியவன்)
(28 டிசம்பர் )இன்று காலை 8.10 மணியளவில் பேசாலை செல்வபுரம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக நீர் தேங்கியிருந்த இடத்தில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக தலைமன்னார் பொலிஸாருக்கு கிராம மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 9.30 மணியளவில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டு ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இறந்தவர் பேசாலை செல்வபுரம் பகுதியைச் சேர்நத 47 வயதுடைய கந்தசாமி ரொனால்ட் ரீகன் என்று தெரியவந்துள்ளது.
சடலமாகக் காணப்பட்ட குறித்த நபர் குடும்பத் தகறாறு காரணமாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் முன்பாகவே சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலம் மன்னார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தலைமன்னார் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.