புதியவன்.
மன்னார் முசலி பிரதேச செயலளார் பிரிவுக்குட்பட்ட மறிச்சுக்கட்டி பாலக்குளி காட்டுக்குள் சென்ற ஆறு பேர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி இறந்துள்ளதாகவும் ஏனைய ஐவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது இன்று செவ்வாய்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
மறிச்சுக்கட்டி மற்றும் பாலக்குளி பகுதியில் வசிக்கும் ஆறு பேர் நேற்று திங்கட்கிழமை (08) அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் சென்ற போது காட்டு யானை துரத்தியுள்ளதாகவும் அதிலிருந்து தப்பித்து சிதறி ஓடிய போது குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகி இறந்துள்ளதாகவும் ஏனைய மூவர் தப்பித்து அவர்களின் கிராமத்துக்கும் இருவர் புத்தளத்துக்கும் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலவன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.