ஆதவன்.
விவசாயிகள் களைநெல் தாக்கம் தொடர்பாக அவதானமாகச்செயற்பட வேண்டும் என்று மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சகிலா பானு அறிவுறுத்தியுள்ளார் .
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மன்னார் மாவட்டத்தில் களைநெல் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. களைநெல் தண்டுப்பகுதியில் ஊதா நிறத்தில் கரும்புள்ளிகளுடன் காணப்படும். விவசாயிகள் களைநெல்லை வெட்டி அகற்ற வேண்டும். விவசாயிகளால் களைநெல்லை அடையாளம் காண்பது கடினமாக இருந்தால் அருகில் உள்ள கம நல சேவைகள் நிலையத்தை நாட முடியும். உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் களை நெல் விதை உதிர்ந்து பரவலடையக்கூடும். இது விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தும் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.