இனியபாரதி.
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட அரச செயலர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் ஆலய வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கூட்டத்தில், இவ்வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், போக்குவரத்து உட்பட அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு, உணவு போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்துக்கு யாழ் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ். மறை மாவட்ட குரு முதல்வர், கடற்படையின் பிராந்திய பொறுப்பதிகாரி காவல்துறை உயரதிகாரிகள் ராணுவ உயரதிகாரிகள் மற்றும் துறை சார் பணிமனைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.