(ஆதவன்)
வனவளப்பணிமனை பிடியிலுள்ள காணியை விடுவித்துத் தாருங்கள்
மன்னார் இசைமாலைத்தாழ்வு மக்கள் போராட்டம்
'நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வனவளப்பணிமனையின் கட்டுப் பாட்டிலுள்ள 46 ஏக்கர் காணியை விடுவித்து காணி அற்றோருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மன்னார் இசைமாலைத் தாழ்வு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நானாட்டானில் கடந்த புதன் கிழமை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
"இசைமாலைத்தாழ்வு கிராமத்துக்குட்பட்ட 113 குடும்பங்கள் குடியிருப்பதற்கு காணியின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றன. ஒரு வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றோம். எனவே மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் கவனத்திற்கொண்டு வனவளப்பணிமனையின் பிடியிலுள்ள காணியை, எம்மைப் போன்ற காணியற்றோருக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.